ஈரோடு, அக். 7 –
ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமியிடம் எச் எம் எஸ் தொழிற்சங்கம் சார்பில் ஈரோடு மாவட்ட செயலாளர் மனோகரன், மாநில செயலாளர் ரமணி மற்றும் நிர்வாகிகள் பழனிச்சாமி, திருமுருகன், நகுலேஸ்வரன், உடல் அமைப்பு தொழிலாளர் மாவட்ட அமைப்பாளர் மகேஷ்வரி, யுவராணி, சையது முஸ்தபா ஆகியோர் கொடுத்து உள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா ஆட்டோ தொழிலாளர்களுக்கு நிரந்தரமான மாத ஊதியம் இல்லாத நிலை உள்ளது. அவர்களுக்கு உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைப்பதில்லை. எனவே அவர்களின் குடும்பங்களுக்கு சமூகப் பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்திட நலவாரிய உறுப்பினர்களின் குடும்பங்கள் மகிழ்ச்சியாக தீபாவளி பண்டிகையை கொண்டாடும் விதத்தில் தீபாவளி போனஸ் ஆக ரூ. 7000 வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



