கன்னியாகுமரி, டிச. 4 –
குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பேரூராட்சி 11-வது வார்டுக்கு உட்பட்ட முதலியார் குளம் சாலையில் எஸ்எஸ் மணி பல்க் எதிர்ப்புறம் டோர்தி மனோகரன் வீட்டில் இருந்து முதலியார் குளம் சுற்றி தாயம்மாள் வீடு வரை உள்ள சாலையில் சிறப்பு நிதி மூலம் ரூபாய் 41 லட்சம் மதிப்பில் சுமார் ஒரு கிலோ மீட்டர் நீளம் தார்ச்சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு 11 வது வார்டு கவுன்சிலர் ஜோஸ்திவாகர் தலைமை தாங்கினார். பேரூராட்சி துணைத் தலைவர் காந்திராஜ், கவுன்சிலர் வீடியோ குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக பேரூராட்சி மன்ற தலைவர் ஜானகி இளங்கோ கலந்து கொண்டு தார்ச்சாலை அமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் பணி மேற்பார்வையாளர் விஜயகுமார், ராபர்ட்வின்சென்ட், பாஸ்கரன், முருகன், கண்ணன், பிரம்மநாயகம், மதுரை வீரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



