தென்தாமரைகுளம், ஏப். 30 –
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் உள்ள விவேகானந்தா கல்லூரியில் இன்று வைரவிழா நுழைவு வாயில் அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது.
விவேகானந்த கல்லூரி முதல்வர் டி. சி.மகேஷ் தலைமை வகித்தார். விவேகானந்தா கல்விக் கழக தலைவர் பாலமுருகன், துணைத்தலைவர்கள் மணி, சந்திரமோகன், துளசி முத்துராம், செயலாளர் ராஜன், இணைச்செயலாளர் இராதாகிருஷ்ணன், பொருளாளர் டாக்டர். பிரியதர்ஷினி, உறுப்பினர், ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்பி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பூமி பூஜை துவக்கி வைத்து அடிக்கல் நாட்டினார். முன்னதாக அடிக்கல் நாட்டு விழாவிற்கு வருகை தந்த விஜய் வசந்த் எம்பி க்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.
நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளர் பாபு, காங்கிரஸ் மாநில செயலாளர் வழக்கறிஞர் சினிவாசன், மதிமுக மாவட்ட செயலாளர் வெற்றிவேல், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் அரோக்கியராஜன், அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி தலைவி அன்பரசி ராமராஜன், அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி காங்கிரஸ் தலைவர் விஜயகுமார், வர்த்தக காங்கிரஸ் மாவட்ட செயலாளர் கிங்ஸிலின், குமரி மாவட்ட வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் டேவிட்சன், சாமிதோப்பு தலைமைப்பதி தலைமை குரு வழக்கறிஞர் பால ஜனாதிபதி மற்றும் விவேகானந்தா கல்லூரி நிர்வாகிகள், பேராசிரியர்கள், பணியாளர்கள் உட்பட மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.



