தென்தாமரைகுளம், மே 07 –
அகஸ்தீஸ்வரம் முத்தாரம்மன் திருக்கோவில் சித்திரை திருவிழாவில் நடைபெற்ற ஊஞ்சல் உற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
அகஸ்தீஸ்வரம் இந்து நாடார் சமுதாய வகை குலசேகர விநாயகர் அறநிலையத்திற்குட்பட்ட தேவி முத்தாரம்மன் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெற்றது.
11 வது நாளான நேற்று 6 ம் தேதி காலை 6 மணிக்கு உதயகால பூஜை, 8 மணிக்கு காலசந்தி பூஜையும், 8.30 மணிக்கு பெண்கள் முளைப்பாரி ஏந்தி ஊர்வலம் வருதல், 9 மணிக்கு வில்லிசை, நண்பகல் 12 மணிக்கு பூக்கொடை, பிற்பகல் 2 மணிக்கு தேவி முத்தாரம்மன் பூத வாகனத்தில் எழுந்தருளி ஊர்வலம் வருதல், இரவு 10 மணிக்கு தேவி முத்தாரம்மன் ஊஞ்சல் உற்சவம், இரவு 11 மணிக்கு திருக்கொடி இறக்குதல் மற்றும் தீபாராதனையும் அதனைத் தொடர்ந்து சமபந்தி விருந்தும் நடைபெற்றது.
விழா நாட்களில் தினமும் அலங்கார தீபாராதனை, பஜனை, அன்னதானம், நாடகம், பல்சுவை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சி, சமபந்தி விருந்து, வாகன பவனி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை ஆலய அறங்காவலர் குழுவினர் கே.எஸ்.மணி, பேராசிரியர் எஸ்.கருணாகரன், ராஜ சுந்தரபாண்டியன், சீனிவாசன், கோகுலகிருஷ்ணன், பொருளாளர் சுயம்புலிங்கம், கணக்கர் ராஜசேகர் ஆகியோர் செய்திருந்தனர்.



