ஈரோடு, பிப். 21 –
ஹிந்த் மஸ்தூர் சபா ஈரோடு மாவட்ட கவுன்சில் மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் ஈரோட்டில் நடந்தது. மாவட்ட செயலாளர் ஜீவா சண்முகம் தலைமையில் நடந்த கூட்டத்தில் மாவட்ட தலைவர் செந்தில் குமார் வரவேற்றார். மாவட்ட செயல் தலைவர் குமாரசாமி முன்னிலை வகித்தார்.
இதில் எச் எம் எஸ் தமிழ் மாநில செயல் தலைவர் ராஜாமணி கலந்து கொண்டு மாவட்ட நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்து பேசினார். இந்த கூட்டத்தில் எச்எம்எஸ் சேலம் மாநில செயலாளர் கணேசன், மாநில அமைப்பு செயலாளர் பாஸ்கர், மாநில துணைத்தலைவர் ரமணி, மாநில சிறப்பு அழைப்பாளர் செல்வராஜ், மாநில துணைத்தலைவர் மனோகரன் மற்றும் மாவட்ட துணைத் தலைவர்கள் மின் வாரியம் அரவிந்த் குமார், ரெயில்வே கூட்செட் பழனிச்சாமி, அமைப்பு சாரா சித்தன் சையத் முஸ்தபா மின் வாரியம் நல்லசிவம் ஆட்டோ மாரியப்பன் மற்றும் துணை செயலாளர்கள், அமைப்புச் செயலாளர்கள், மாவட்ட மகளிர் அணியினர், அமைப்பு செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் யுவராணி ஆயிஷா நன்றி கூறினார்.



