வேலூர், ஜூலை 14 –
வேலூர் கோல்டன் சிட்டி ரோட்டரி சங்க 2025 -26 ஆம் ஆண்டு புதிய நிர்வாகிகள் பதவியேற்கும் விழா வேலூர் கிரீன் சர்க்கிள் சாந்தி மகாலில் நடைபெற்றது. புதிய தலைவராக ஜி. கருணாநிதி, செயலாளராக சி. சிவக்குமார், பொருளாளராக டி.கே. மனோகரன் பதவியேற்றனர்.
விழாவில் சிறப்பு விருந்தினராக ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநர் ரொட்டேரியன் வி. சுரேஷ் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்து பேசினார். கௌரவ விருந்தினராக வழக்கறிஞர் ஹரி கிருஷ்ணன் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார். இதில் முன்னாள் நிர்வாகிகள் என். பாஸ்கரன், சி.எம். தங்கதுரை உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.