கிருஷ்ணகிரி, செப். 15 –
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட வேலம்பட்டி கிராமத்தில் நேற்று அஇஅதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில் ஓசூரில் இயங்கி வரும் பிரபல செல்போன் தயாரிக்கும் நிறுவன பணியிடங்களுக்கான இலவச மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு கழகத் துணைப் பொதுச் செயலாளர் வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சருமான கே.பி. முனுசாமி கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி முகாமினை துவக்கி வைத்தனர்.
இந்த இலவச மாபெரும் வேலை வாய்ப்பு முகாமில் கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட கழக செயலாளர் அசோக்குமார், இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் கே.பி.எம். சதீஷ்குமார், ஒன்றிய கழக செயலாளர் கிருஷ்ணன், நாகோஜனஅள்ளி பேரூராட்சி கழக செயலாளர் அண்ணாதுரை, மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் ரவிச்சந்திரன், பையூர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த முகாமில் சுற்று வட்டாரப் பகுதிகளான மத்தூர், போச்சம்பள்ளி, அகரம், வேலம்பட்டி, சந்தூர், நெடுங்கல், வேப்பனப்பள்ளி, பர்கூர், மகாராஜாகடை குந்தாரப்பள்ளி, எம்.சி. பள்ளி அனைத்து கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர். இறுதியில் இளைஞர் பாசறை கார்த்திகேயன் நன்றியுரை ஆற்றினார். இந்த விழாவில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



