திருப்பூர், மே 10: திருப்பூர் வீரராகவ பெருமாள், விஸ்வேஸ்வரசுவாமி கோயிலில் வைகாசி விசாக தேர் திருவி ழாவை முன்னிட்டு தேர்கள் தயார்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
திருப்பூரில் பிரசித்தி பெற்ற திருப்பூர் வீரராகவ பெருமாள் கோயில், ஈஸ்வரன் கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு தேர் திரை தயார்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. பெருமாள் கோயில் விஸ்வேஸ்வரசுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் மாலை ஆறு மணி அளவில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் அறங்காவலர் குழு நிர்வாகிகள் செயல் அலுவலர் சரவணபவன் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்கள். ஆண்டு தோறும் வைகாசி விசாக தேர்திருவிழா 2 நாட்கள் விமர் சையாக நடைபெறும். அதன்படி, நடப்பாண்டு திருவிழா வரும் 23.
24ம் தேதி நடைபெறு கிறது. இந்நிலையில், தேரோட்டம் நெருங்கிற சூழலில் கோயில் உள்ள தேரை பழுதுபார்த்து சுத்தப்படும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை தொழி லாளர்கள் தீவிரமாக செய்து வருகின்றனர்