விளாத்திகுளம், ஆகஸ்ட் 14 –
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள A. சொக்கலிங்கபுரம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ சுந்தர விநாயகர், அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்மன், அருள்மிகு ஸ்ரீ வாலாட்டப்பன் திருக்கோவில் ஆடி மாத கொடை விழாவை முன்னிட்டு மூவரசர் இளைஞர் நற்பணி மன்றம் நடத்தும் 3-ம் ஆண்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
சின்ன மாடு, பூஞ்சிட்டு என இரு பிரிவுகளாக நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயத்தில் மதுரை, திருநெல்வேலி, இராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான ஜோடி மாடுகள் போட்டியில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன. சின்ன மாடுக்கு போக வர தூரம் 6 மைல், பூஞ்சிட்டு மாட்டு வண்டிக்கு போக வர தூரம் 5 மயில் தூரம் நிர்ணயிக்கப்பட்டு போட்டியானது நடைபெற்றது.
போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் மற்றும் ஓட்டி வந்த சாரதிகளுக்கு விழா கமிட்டியின் சார்பாக குத்துவிளக்கு, சுழல் கோப்பை, ரொக்கப்பணம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த மாபெரும் மாட்டு வண்டி கொள்கை பந்தயத்தை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டயேன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.



