By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வில்லுக்குறி பேரூராட்சியில் தெரு நாய் கடித்து 7 பேர் காயம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வில்லுக்குறி பேரூராட்சியில் தெரு நாய் கடித்து 7 பேர் காயம்
கனஂனியாகுமரி

வில்லுக்குறி பேரூராட்சியில் தெரு நாய் கடித்து 7 பேர் காயம்

Last updated: July 3, 2025 8:00 pm
July 3, 2025 5 Views
Share
SHARE

திங்கள்சந்தை, ஜூலை 3 –

வில்லுக்குறி பேரூராட்சி தேசிய நெடுஞ்சாலை ஓரம் சில மாதங்களுக்கு முன்பு விளை நிலத்தில் செப்டிக் டேங்க் கழிவுகள் கொட்டப்பட்டது. இதையறிந்த நாம் தமிழர் கட்சியினர் பொறி வைத்து செப்டிக் டேங்க் வாகனத்தை சிறை பிடித்த சம்பவம் நடந்திருந்தது. இதனிடையே பேரூராட்சி வளமீட்பு பூங்காவில் மருத்துவ கழிவுகள் கொட்டி எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள் வில்லுக்குறி பாலம் தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள பேரூராட்சிக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் உணவு, பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் எரித்த சம்பவம் நடந்தது.

இதேபோன்று பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இறைச்சி கழிவுகள், குப்பைகள் கொட்டப்படும் சம்பவம் நடந்து வருகிறது. இதனால் தெரு நாய்கள் பெருகி மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. இவற்றை அகற்ற வேண்டும். தெருக்களில் இறைச்சி கழிவு கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பலர் செயல் அலுவலரிடம் மனு கொடுத்து வந்தனர். இது சம்பந்தமான பல வீடியோ காட்சிகளும் சமூக வலைதளத்தில் வைரலானது. பத்திரிகைகளும் செய்திகள் வெளியிட்டுள்ளன. இருந்தும் பேரூராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் கீழப்பள்ளம் பகுதியில் தெரு நாய் ஒன்று அந்த வழியாக வந்தவர்களை கடித்து குதறிய சம்பவம் நேற்று நடந்துள்ளது. கீழப்பள்ளம் பகுதியில் நேற்று காலை ஏராளமான தெருநாய்கள் அங்கும் இங்கும் சுற்றி திரிந்துள்ளன. அவைகளுக்குள் சண்டை ஏற்பட்டு மாறி மாறி கடித்துள்ளன. அப்போது ஒரு தெரு நாய் ஆக்ரோஷமாக வெறி வந்தது போல் அந்த வழியாக சென்ற ஒரு முதியவரை கடித்து குதறியது. அதோடு நிற்காமல் கீழப்பள்ளம் முதல் திருவிடைக்கோடு வரை ஓடி சென்று எதிரே வருவோரையும் போவோரையும் கடித்து குதறியது. பேரூராட்சி சுகாதார பணியாளர் உட்பட 3 பெண்கள், வாரியல் விற்பனை செய்ய அந்த வழியாக நடந்து வந்த வட மாநில இரண்டு தொழிலாளர்கள் உட்பட 4 ஆண்கள் என 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

கால்நடைகளையும் விட்டு வைக்காத வெறிநாய் அங்கு கட்டி வைத்திருந்த 2 ஆடுகளையும் கடித்து குதறி உள்ளது. இதில் ஒரு ஆட்டிற்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு சதை கிழிந்து ரத்தம் சொட்டிய சம்பவமும் நடந்துள்ளது. காயம் அடைந்தவர்கள் தக்கலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல் அறிந்த இளைஞர்கள் தெரு நாயை பிடிக்க முயற்சித்துள்ளனர். ஆனால் அது தப்பி ஒடி விட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். வில்லுக்குறி பேரூராட்சி 3-வது மற்றும் 4-வது வார்டுக்கு உட்பட்ட விவேகானந்தர் சந்திப்பு, அயோத்தியா காரியாலயம், திருவிடைக்கோடு அம்மன் கோவில், கிருஷ்ணன் கோவில், கீழப்பள்ளம் மாத்தான்குளம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி திரியும் தெரு நாய்களை உடனே அப்புறப்படுத்த வேண்டும். இல்லையென்றால் குழந்தைகள், மாணவர்கள், முதியவர்கள் என பலர் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்படும் என செயல் அலுவலருக்கு அப்பகுதி மக்கள் மனு கொடுத்து வருகின்றனர். மனிதர்களையும் கால்நடைகளையும் நாய் கடித்து குதறிய சம்பவத்தால் நேற்று காலை முதல் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

You Might Also Like

சுசீந்திரம் அருகே குளத்தில் மூழ்கி கொத்தனார் சாவு

திருமலை உட் ஒர்க்ஸ் திறப்பு விழா

அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் சாலை விழிப்புணர்வு கருத்தரங்கம்

அகஸ்தீஸ்வரம் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு; பைக்கில் வந்த மர்ம நபர்கள் துணிகரம்

குமரியில் 2 பேருக்கு அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
மாவட்டம்

பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்

November 9, 2024 19 Views
மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.தினேஷ் குமார் வடம் பிடித்து துவக்கி வைத்தார்
தேனியில் காலம் ஃபர்னிச்சர் புதிய கிளை திறப்பு: எம்.பி. தங்க தமிழ்ச்செல்வன் திறந்து வைத்தார்
மாவட்ட ஊராட்சியின் சாதாரன கூட்டம்
என் கல்லூரி கனவு வழிகாட்டி நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?