திருப்பூர், ஜூன் 16 –
மாவட்ட ஆட்சித்தலைவர் மனிஷ் நாரணவரேதலைமையில் இன்று (16.06.2026) திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார்கள்.
திருப்பூர் மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்ளிலும் இன்று 16.06.2026 முதல் 1435-ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நடைபெறுகின்றது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களுக்கும் நடைபெற்று வரும் 1,435 பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாயத்திற்கு (ஜமாபந்தி) வருவாய் தீர்வாய அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் இன்றைய தினம் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 1,435 பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட ஆட்சித்தலைவர் மனிஷ் நாரணவரே தலைமையில் நடைபெற்றது.
இந்த வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) பொதுமக்களிடமிருந்து பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டா, வாரிசுச் சான்று, பிறப்பு மற்றும் இறப்புச் சான்று, குடும்ப அட்டை, சாதிச்சான்று, வருமானச் சான்று, முதல் பட்டதாரிச் சான்று, இருப்பிடச் சான்று, ஆதரவற்ற விதவைச் சான்று, கணினி சிட்டா பெயர் திருத்தம், மின்சார இணைப்பு, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, விதவை உதவித்தொகை, நில அளவை, குடிநீர், பொது சுகாதாரம் சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மனிஷ் நாரணவரே பெற்றுக் கொண்டார்கள்.
மேலும், பல்லடம் உள்வட்டத்திற்குட்பட்ட பணிக்கம்பட்டி, சித்தம்பலம், வடுகபாளையம், பல்லடம், நாரணாபுரம், கரைப்புதூர், கணபதிபாளையம் ஆகிய கிராமங்களில் பாரமரிக்கப்பட்டு வரும் வருவாய்த்துறை தொடர்பான கோப்புகளை மாவட்ட ஆட்சித்தலைவர் தணிக்கை மேற்கொண்டார்கள். தொடர்ந்து, வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நிகழ்ச்சியில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட அனைத்து கோரிக்கை மனுக்களையும் சமந்தப்பட்ட அலுவலர்கள் முழுமையாக ஆய்வு செய்து மேல்நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் உத்திரவிட்டார்கள்.
முன்னதாக, பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) மாவட்ட ஆட்சித்தலைவர் நில அளவை கருவிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். இந்நிகழ்ச்சியில், உதவி இயக்குநர் (நிலஅளவை) ஹிரிதாஸ், பல்லடம் வட்டாட்சியர் கோவிந்தசாமி, பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ், அனுராதா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.



