திருச்சி, ஜூன் 18 –
லால்குடி அருகே செம்பரை கிராமத்தைச் சேர்ந்த பர்வீன் கனி, கோமக்குடி கருப்பு கோவிலில் சீரியல் செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, தாழ்வான மின்கம்பி மீது கை உரசி மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.
மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இது குறித்து லால்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


