மதுரை: ஆக. 25.
மதுரை அரசு இராசாசி மருத்துவமனை வளாகத்தில், நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.26 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பொதுமக்கள் காத்திருப்போர் கூடம் திறக்கப்பட்டது.
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் நிஷாந்த் கிருஷ்ணா, இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புதிதாக கட்டப்பட்ட காத்திருப்போர் கூடத்தை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் (பொறுப்பு)/துணை மேயர் தி. நாகராஜன் மற்றும் இராசாசி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் அருள் சுந்தரேஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.



