போகலூர், அக். 6 –
ராமநாதபுரம் நகர் அதிமுகவின் சார்பில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கழக செயலாளர் முனியசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நகர் கழகச் செயலாளர் பொறியாளர் என்.ஆர். பால்பாண்டியன் வரவேற்புரையாற்றினார். விருதுநகர் மண்டல ஐடி விங் துணைச் செயலாளர் வெண்ணிலா சசிகுமார் சிறப்புரை நிகழ்த்தினார்.
இந்தக் கூட்டத்தில் கழக மாணவரணி துணைச் செயலாளர் செந்தில்குமார், விருதுநகர் மண்டல ஐடி விங் செயலாளர் சரவணகுமார், மாவட்டக் கழக இணைச் செயலாளர் கவிதா சசிகுமார், அரசு போக்குவரத்து கழக மண்டல செயலாளர் ஏபி சந்திரன், நகர் கழக அவை தலைவர் ஆர் எஸ் ராமமூர்த்தி, எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் வீரபாண்டியன், வட்டக் கழக செயலாளர்கள் சண்முகம், எம். சண்முகம் முன்னாள் நகர் மன்ற உறுப்பினர்கள் செல்வம் கே.ஜி. தவ முனியசாமி குமார் கே வன்னிய ராஜன் நாகஜோதி, ஜானகிராமன், முனீஸ்வரன், முருகன், கே. முருகன் செல்லத்துரை, செந்தில் குமார், கோகுல கிருஷ்ணன், மாரிக்கண்ணன், செந்தில் சி.ராசு அண்ணா நகர் ரமேஷ், காளிதாஸ் முனீஸ்வரன், ஐடி விங் அருண் பாண்டியன், வேலு ராம்குமார், பாலசுப்பிரமணியன், மணிவாசகம் அண்ணா தொழிற்சங்க வேலாயுதம் பூபதி உள்ளிட்ட ஏராளமான பூத் கமிட்டி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.



