கிருஷ்ணகிரி, ஜூலை 22 –
டெல்லி மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தியை டெல்லி போலிசார் கைது செய்ததை கண்டித்து நாடு முழுவதும் மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம்.சி.ரகு தலைமையில் ஒன்று திரண்ட காங்கிரஸ் கட்சியினர் கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் மத்திய அரசின் அடக்குமுறையை கண்டித்து கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இந்த கண்டன ஆர்பாட்டத்தின் போது மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை உடனடியாக பதவி விலக வலியுறுத்தி மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் கலந்துக் கொண்ட பாராளுமன்ற எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தியை கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோசங்களை எழுப்பினார்கள்.
இந்த கண்டன ஆர்பாட்டத்தின் போது மாநில செயற்குழு உறுப்பினர் அகா கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் மாவட்டத் தலைவர்கள் நாராயணமூர்த்தி, ராஜகுமாரவேல், சேலம் மண்டல ரயில்வே கோட்ட உறுப்பினர் ரகமத்துல்லா, நகர தலைவர்கள் லலித் ஆண்டனி, ஸ்ரீராம், டாக்டர் தகி, எஸ்.சி துறையின் மாநில பொறுப்பாளர் ஆறுமுக சுப்பிரமணி, நகர மன்ற உறுப்பினர் விநாயகம், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் அர்னால்டு ரமேஷ், மாவட்ட பொது செயலாளர் அப்சல்,
முன்னாள் ஓ பி சி மாவட்ட தலைவர் ஆஜித் பாஷா, மாவட்டச் செயலாளர்கள் சக்கரவர்த்தி,
பிரஸ் சரவணன், ரஜினிகுட்டி என்கின்ற விஜயராஜ், வட்டாரத் தலைவர் மாரியப்பன், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் முனீர், ஊடகத்துறை தலைவர் கமலக்கண்ணன், மூயீன் முஸ்தக், சதாம், முனுசாமி, திம்மராயன், அருண், ஏழுமலை, சின்னசாமி, பூபதி ராஜன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர் ஆர்பாட்டம் முடிவில் நகர மன்ற உறுப்பினர் விநாயகம் நன்றி உரையாற்றினார்.



