நாகர்கோவில், அக்டோபர் 7 –
முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் வடசேரி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் மாநில போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் பள்ளி பிரிவில் மாணவிகள் நீச்சல் போட்டியில் கௌசல்யா 200 மீ. பட்டர்பிளை பிரிவில் 2ம் இடம், தனுசா இதே பிரிவில் 3ம் இடம், சலோமியா 800 மீ. பிரீ ஸ்டைல் போட்டியில் 3ம் இடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.
குத்துச்சண்டை போட்டியில் ஐஸ்வர்யா மாநில அளவில் சென்னையில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்கிறார். சிலம்ப போட்டியில் 7 சுற்றுகள் விளையாடி இறுதி சுற்றில் சுபிக்சன் வெள்ளி பதக்கம் பெற்றார். இம் மாணவ, மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர் பெர்லா ஜெயந்தி, உதவி தலைமை ஆசிரியர் பெனட் ஜோஸ், உடற்கல்வி இயக்குனர் காட்வின், உடற்கல்வி ஆசிரியர் விமலன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.


