சேலம், ஜூலை 6 –
சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் காடையாம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் முனுசாமி. இவர் ஒரு மாற்றுத்திறனாளி ஆவார். இவருக்கு சொந்தமான 74 சென்ட் நிலத்தை அபகரித்து விட்டதாகவும், கிராம கணக்கில் பட்டா பெயர் மாற்றம் செய்து விட்டதாகவும் கூறி மேட்டூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 22.6.2026 அன்று மனு கொடுத்தும் மேற்படி கோட்டாட்சியர் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி இன்று 06.07.2026 ல் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வாயிலில் தனது மனைவியுடன் தீக்குளிக்க முயற்சித்தார்.
நீதிமன்றங்கள் தனக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியும் வருவாய் அதிகாரிகள் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு கணவன் மனைவி இருவரும் தீ குளிக்க முயற்சி செய்தனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் பணியில் இருந்த காவலர்கள் அவர்களை மீட்டு திங்கட்கிழமை மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்க அனுப்பி வைத்தனர்.



