மார்த்தாண்டம், பிப். 23 –
கன்னியாகுமரி ஒருங்கிணைந்த மாவட்ட பாஜக இளைஞர் அணி சார்பில் மார்த்தாண்டம் பேருந்து நிலையம் அருகே சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளுக்கு காரணமான போதை கலாச்சாரத்தை கண்டித்தும், நடவடிக்கை எடுக்க தவறிய திமுக அரசை கண்டித்தும்
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேற்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் சுஜின் மற்றும் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் அஸ்வின் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் தேசிய செயற்குழு உறுப்பினர் உமாரதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் பாஜக கிழக்கு மேற்கு மாவட்ட தலைவர்கள் ஆர் டி சுரேஷ், கோபகுமார், அதிமுக மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயசுதர்சன், தமிழ் மாநில காங்கிரஸ் மாநில செயலாளர் உட்பட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் பங்கேற்றவர்கள் போதைக்கு எதிராக திமுக அரசு நடவடிக்கை எடுக்காததால் ஏற்பட்டு உள்ள பாதிப்புகளை பற்றி பேசியதோடு மக்கள் திமுக ஆட்சி மீது வெறுப்பில் உள்ளதால் 2026 ஆட்சி மாற்றம் நிச்சயம் என்று பேசினார்கள்.



