By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருப்போரூர் சார்பதிவகம் மூன்றாக பிரிப்பு; கேளம்பாக்கம், நாவலூரில் புதிய சார்பதிவகங்கள் உருவாக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > செங்கல்பட்டு > திருப்போரூர் சார்பதிவகம் மூன்றாக பிரிப்பு; கேளம்பாக்கம், நாவலூரில் புதிய சார்பதிவகங்கள் உருவாக்கம்
செங்கல்பட்டு

திருப்போரூர் சார்பதிவகம் மூன்றாக பிரிப்பு; கேளம்பாக்கம், நாவலூரில் புதிய சார்பதிவகங்கள் உருவாக்கம்

Last updated: August 1, 2025 1:10 pm
August 1, 2025
54 Views
Share
SHARE

திருப்போரூர், ஆகஸ்ட் 01 –

திருப்போரூர் தெற்கு மாட வீதியில் கடந்த 1886-ம் ஆண்டு முதல் பத்திரப்பதிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள நாவலூர், படூர், கேளம்பாக்கம், தையூர், திருப்போரூர், இ.சி.ஆர். சாலையில் உள்ள கானத்தூர், முட்டுக்காடு, கோவளம், திருவிடந்தை உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களின் சொத்து ஆவணங்களை பதிவு செய்வதற்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில் இந்த அலுவலகத்தை நான்காக பிரிக்க பதிவுத்துறை முடிவு செய்து அரசுக்கு கருத்துரு அனுப்பியது.

இதையடுத்து திருப்போரூர் அலுவலகத்தை திருப்போரூர், வண்டலூர், நாவலூர், கேளம்பாக்கம் ஆகிய நான்கு அலுவலகங்களாக பிரிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்ததை அடுத்து தற்போது முதற்கட்டமாக நாவலூர் மற்றும் கேளம்பாக்கம் ஆகிய இரண்டு அலுவலகங்கள் திறந்து வைக்கப்படுகின்றன. தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரண்டு புதிய சார்பதிவகங்களையும் திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் இந்த இரண்டு அலுவலகங்களும் செயல்பாட்டு வந்துள்ளது. இதுமட்டுமின்றி பதிவுத்துறைக்கு தையூர் கிராமத்தில் 1 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு ஒருங்கிணைந்த பதிவுத்துறை வளாகம் அமைக்க 26 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 2 ஆண்டுகளில் இந்த வளாகம் கட்டி முடிக்கப்பட்டு அனைத்து அலுவலகங்களும் இந்த வளாகத்தில் செயல்படும் என தெரிகிறது.

கேளம்பாக்கம் சார்பதிவகத்திற்கு மாற்றப்படும் கிராமங்கள் கேளம்பாக்கம், புதுப்பாக்கம், சாத்தங்குப்பம், தையூர் அ, தையூர் ஆ, வெளிச்சை, கொளத்தூர், காயார், கோவளம், திருவிடந்தை, குன்றுக்காடு, செம்மஞ்சேரி, நெம்மேலி, கிருஷ்ணன்காரணை, சாலவான்குப்பம் ஆகிய கிராமங்கள், நாவலூர் சார்பதிவகத்திற்கு மாற்றப்படும் கிராமங்கள், நாவலூர், காரணை, சிறுசேரி, தாழம்பூர், படூர், கானத்தூர் ரெட்டிக்குப்பம், கழிப்பட்டூர், ஏகாட்டூர், முட்டுக்காடு ஆகிய கிராமங்கள்.

இவை தவிர மற்ற கிராமங்கள் அனைத்தும் திருப்போரூர் சார்பதிவகத்திலேயே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேளம்பாக்கம் சார்பதிவகம் வண்டலூர் சாலையில் உள்ள தமிழ் அன்னை சமுதாயக்கூடத்திலும், நாவலூர் சார்பதிவகம், தாழம்பூர் சாலையில் உள்ள அறிஞர் அண்ணா சமுதாய நலக்கூடத்திலும் தற்காலிகமாக செயல்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின் போது மாவட்ட ஆட்சியர் மற்றும் எம்எல்ஏ உட்பட ஊர் தலைவர்கள், பத்திர பதிவுத்துறை அதிகாரிகள், அலுவலர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்ப்பு
வாக்கு என்னும் அதிகாரிகளுக்கான இரண்டாம் கட்ட சீரற்ற சுழற்சி முறையில் ஒதுக்கீடு
பொன்மார் முதல் நிலை ஊராட்சி திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
ஸ்ரீ சைதன்யா பள்ளி மாணவர்கள் சாதனை
மண்ணிவாக்கத்தில் அருள்மிகு பெரியபாளையத்தம்மன் மற்றும் அருள்மிகு தெருவீதி அம்மன் ஆலயத்தில் ஆடி திருவிழாவை முன்னிட்டு பால்குடம் ஊர்வலம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

அகிலத்திரட்டு உதயதின விழா

December 13, 2024
114 Views
மீனாட்சி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் 14 – வது ஆண்டு விழா
திருவெண்ணெய்நல்லூர் அருகே திமுக உறுப்பினர் சேர்க்கை – பொன். கௌதம சிகாமணி பங்கேற்பு
புதிய தமிழகம் கட்சியின் 28ம் ஆண்டு தொடகக விழா
இலவச சிறுநீரக பரிசோதனை முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account