சங்கரன்கோவில், ஆகஸ்ட் 30 –
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றியத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் மலையான்குளம் மற்றும் இலந்தைகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களுக்கு மலையான்குளம் இ-சேவை மையத்தில் வடக்கு மாவட்டச் செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்து கொண்டு தலைமை வகித்து முகாமினை துவக்கி வைத்தார். மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் பெரியதுரை முன்னிலை வகித்தார். முகாமினை மாவட்ட கண்காணிப்பாளர் ஜவுளித்துறை ஆணையர் லலிதா ஆய்வு செய்தார்.
முகாமில் மகளிர் உரிமைத்தொகை பெற மற்றும் 15 துறைகள் சம்பந்தமான கோரிக்கைகளுக்கு மனுக்கள் பெறப்பட்டது. நிகழ்ச்சியில் நிர்வாக பொறியாளர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கண்ணன், செல்வராஜ் மலையான்குளம் ஊராட்சி மன்ற தலைவர் முத்துலட்சுமி கண்ணன், இலந்தைகுளம் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் கருத்தப்பாண்டி, வக்கீல் கண்ணன், சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ், மாவட்ட பிரதிநிதி சண்முகப்பாண்டியன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கணேசன், கிளைக் கழக செயலாளர் கருத்தப்பாண்டி, எம். துரை, செந்தூர் பாண்டியன், கணேசன், மகேஷ்குமார், வேல்முருகன், கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



