தென்காசி, ஆகஸ்ட் 25 –
தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் சேர்ந்தமரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் தலைமையில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மரு. சதன்திருமலைக்குமார் ஆகியோர் முன்னிலையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு ரூ.10.91 கோடி மதிப்பிலான 18 புதிய கட்டிடங்களை திறந்து வைத்து ரூ.6 கோடி மதிப்பிலான 5 புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்கள்.
நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன், முன்னாள் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் செல்லத்துரை, திமுக மற்றும் கூட்டணி கட்சியை சார்ந்த முக்கிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



