திருவள்ளூர், ஜூலை 27 –
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பேரம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையம் சுமார் 2 கோடி மதிப்பு செலவிட்டில் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் அடிப்படை வசதிகள் ஏதுமில்லாமல் இருப்பதால் மக்கள் அவதி அடைகின்றனர். பேரம்பாக்கம் அருகில் ஏற்பட்ட சாலை விபத்தில் இருவருக்கு காயம் ஏற்பட்டு முதல் உதவி சிகிச்சைக்காக பேரம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இங்கு ஆட்டோவில் இருந்து அடிபட்ட நபரை இறக்கி மருத்துவமனைக்குள் கொண்டு செல்வதற்கு டெக்ச்சர் கூட இல்லாமல் பழைய கட்டை பெஞ்சை கொண்டு வந்து அடிபட்ட நோயாளியை இறக்கி வைத்தியம் பார்த்தது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.



