மதுரை, செப்.02.
மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் நிஷாந்த் கிருஷ்ணா, இ.ஆ.ப., மதுரை கிழக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவலக செயல்பாடுகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் அரசு சேவைகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது, பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், வருவாய் தொடர்பான சேவைகள் மற்றும் பட்டா மாற்றப் பணிகளின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, பொதுமக்களுக்கு வழங்கப்படும் வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களின் விண்ணப்பங்கள் மீதான நடவடிக்கைகள் மற்றும் அவற்றை வழங்கும் பணிகளின் முன்னேற்றத்தையும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
பொதுமக்கள் அரசு அலுவலகங்களுக்கு வரும் போது அவர்களின் கோரிக்கைகளுக்கு உரிய முறையில் விரைவாக தீர்வு காணவும், அரசு சேவைகள் தாமதமின்றி மக்களை சென்றடைவதை உறுதி செய்யவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.



