தேனி, மார்ச் 21 –
தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, தொழுகையை முடித்து வீடு திரும்பிய முஸ்லீம் மக்களுக்கு பேரூராட்சி தற்காலிக ஊழியர்கள் கார்த்திக், முருகேசன், ஆசிப் ஆகியோர் அன்புடன் வாழ்த்துகள் தெரிவித்து குளிர்பானம் வழங்கினர்.
மத எல்லைகளை மறந்து மனிதநேயத்தை முன்னிறுத்திய இந்த சிறிய செயல், பெரிய செய்தியை சமூகத்துக்கு எடுத்துரைக்கிறது. இனம், மதம் என்ற பேதங்களை கடந்தும் மனிதர்கள் ஒருவருக்கொருவர் அன்பு காட்டும் போது தான் உண்மையான ஒற்றுமை உருவாகிறது என்பதற்கு இது ஒரு உயிர்ப்பான சான்றாகும்.
இத்தகைய செயல்கள் சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதோடு, அடுத்த தலைமுறைக்கும் ஒற்றுமையின் மதிப்பை உணர்த்தும் ஒரு சிறந்த முன்மாதிரியாகும். “மனிதநேயம் தான் உயர்ந்த மதம்” என்பதைக் கண்ணுக்கு காண்பித்த அழகான நிகழ்வாக இது அமைந்துள்ளது.



