தஞ்சாவூர், ஜூன் 30 –
போதை பொருள் பயன்படுத்தியதாக வீடியோ வெளியான நிலையில் பதவி நீக்கம் செய்யக் கோரி தஞ்சாவூரில் போலீசாரியின் தடையை மீறி திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக பெண்கள் உள்பட 95 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை விளையாட்டு மைதானத்தில் போதை பொருள் பயன்படுத்தியதுபோல் வீடியோ வெளியான விவகாரத்தில் தமிழக மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் திமுக மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இருந்தாலும் தடை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர் பனங்கல் கட்டிடம் முன்பு திமுக மாணவர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாணவ ரணி மாநகர அமைப்பாளர் ராம் குமார் தலைமை தாங்கினார். முன்னாள் எம்எல்ஏ டி .கே.ஜி நீல மேகம், திமுக மாநகர செயலாளர் சண் ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வடக்கு மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் ராஜேஷ், கும்பகோணம் மாநகர அமைப்பாளர் கௌதமன், துணை அமைப்பாளர்கள் தீனா, தேவராஜ், முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் செல்வம், பகுதி செயலாளர்கள் கார்த்திகேயன், வாசிம் ராஜா, மண்டல குழு தலைவர்கள் மேத்தா, ரம்யா சரவணன், கலையரசன் மற்றும் கவுன்சிலர்கள் மாணவர் அணி, மகளிர் அணி உள்பட அனை த்து அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் சரத் குமாரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், கோஷங்கள் எழுப்பப்பட்டது. தடையை மீறி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 95 திமுக வினரை போலீசார் கைது செய்தனர். திமுகவினரின் போராட்டத்தையொட்டி தஞ்சாவூர் நகர துணை போலீஸ் சோமசுந்தரம் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், சுபா, பசுபதி மற்றும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.



