By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: போச்சம்பள்ளியில் சாலையோரம் கொட்டப்படும் மாங்காய்கள்; கொள்முதல் விலை நிர்ணயிக்க கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > போச்சம்பள்ளியில் சாலையோரம் கொட்டப்படும் மாங்காய்கள்; கொள்முதல் விலை நிர்ணயிக்க கோரிக்கை
கிருஷ்ணகிரி

போச்சம்பள்ளியில் சாலையோரம் கொட்டப்படும் மாங்காய்கள்; கொள்முதல் விலை நிர்ணயிக்க கோரிக்கை

Last updated: June 16, 2025 5:23 pm
June 16, 2025 29 Views
Share
SHARE

போச்சம்பள்ளி, ஜூன் 16 –

தமிழக மாங்காய்களுக்கு ஆந்திரா, கர்நாடக மாநில அரசு தடை விதித்துள்ள நிலையில் போச்சம்பள்ளியில் விலையின்றி சாலையோரம் மாங்காய்களை விவசாயிகள் கொட்டி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 35 ஆயிரம் ஹெக்டர் பரப்பில் ஆண்டுக்கு 1,50,000 மெட்ரி டன் மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு சுவை மிகுந்த ரகங்களான அல்போன்ஸா, தோத்தாபுரி, பங்கனப்பள்ளி, நீலம், செந்தூரா, மல்கோவா, பித்தர் போன்ற வகை மாம்பழங்கள் அதிக அளவில் விளைக்கப்படுகிறது. விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டு லட்சக்கணக்கான விவசாயிகள் உள்ளனர். நிகழாண்டில் நோய் தாக்கம், விலையின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மா விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். போதிய வருவாய் கிடைக்காததால் விவசாயிகள் மாங்காய்களைப் பறித்து சாலையோரம் வீசும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது குறித்து மா விவசாயிகள் சங்கத் தலைவர் சிவகுரு கூறுகையில், ‘மாங்காய்களுக்கான கொள்முதல் விலையை நிர்ணயம் செய்ய 2 முறை முத்தரப்பு கூட்டம் நடத்தியும் எவ்வித பயனும் இல்லை. தற்போது தோத்தபுரி ரக மாங்காய்கள் மண்டிகளில் கிலோ 3 முதல் 5 ரூபாய் வரை கொள்முதல் செய்கிறார்கள். இதனால் அறுவடைக் கூலி கூட கிடைப்பதில்லை. ஆந்திர மாநிலத்தில் மா விவசாயிகளைக் காக்கும் வகையில் மாவிற்கு கொள்முதல் விலை ரூ.12 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. மேலும் தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து மாங்காய் கொள்முதல் செய்தால் உள்ளூர் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் தடை விதித்துள்ளனர். எனவே, தமிழகத்தில் பாதிக்கப்பட்ட மா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்’ என்றார். போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த சிறு குறு விவசாயிகள் தங்களது தோட்டத்தில் விளைந்த மாங்காய்களைப் பறித்து மூட்டைகளாகக் கட்டி டூவீலர் மற்றும் டெம்போ மூலம் கொண்டு வருகிறார்கள். ஆனால் வியாபாரிகள் கேட்பதற்கு கூட முன் வராததால் சில விவசாயிகள் மாங்காய்களை சாலைகளில் கொட்டி விட்டு செல்கிறார்கள். இதன் காரணமாக போச்சம்பள்ளி வட்டாரப் பகுதிகளில் உள்ள அனைத்து சாலைகளிலும் ஆங்காங்கே மாங்காய்கள் மூட்டை மூட்டையாகக் கொட்டப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் மாங்காயை சாலையோரம் கொட்டி விட்டுச் செல்கிறார்கள்.

You Might Also Like

லஞ்ச ஊழல் ஒழிப்பு இயக்கம் சார்பாக புதிய நிர்வாகிகள் அறிவிப்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம்

ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பில் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் தீரன் சின்னமலையின் 220-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

கிருஷ்ணகிரியில் உள்ள தனிஷ்க்கில் “அகல்யம்” புதிய நகை தொகுப்பு அறிமுகம்

காரப்பட்டு ஊராட்சியில் ருத்ரா எலக்ட்ரிகல் & ஹார்ட்வேர் கடையில் பூட்டை உடைத்து திருட்டு

போச்சம்பள்ளி சுண்டகப்பட்டி கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

சூறைக்காற்றுடன் கூடிய கடல் கொந்தளிப்பு

June 15, 2024 51 Views
ஈரோடு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கோவையில் டி ஸ்டைல் டெக்கார்ஸ் ஷோரூம் திறப்பு விழா
தமிழ்நாடு முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்தனர்
முழுவுருவ வெண்கல சிலையை திறந்து வைத்து திமுகவினர் கொண்டாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?