ஈரோடு, ஜூலை 16 –
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி., பிறந்தநாளையொட்டி ஆகஸ்ட் 17ஆம் தேதி உளுந்தூர்பேட்டையில் தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து, வருகின்ற 18ஆம் தேதி திருப்பூர் லட்சுமி திருமண மண்டபத்தில் எழுச்சித்தமிழர் தலைமையில் மேற்கு மண்டல செயற்குழு கூட்டம் மிக பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது.
இக்கூட்டத்தை எவ்வாறு சிறப்பு செய்ய வேண்டும், பொதுமக்களை எவ்வாறு பெருந்திரளாக அழைத்துச் செல்ல வேண்டும் என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் பெருந்துறை சட்டமன்றத் தொகுதி மாவட்ட தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் வி.விஜயபாலன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பெருந்துறை சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
இதில் பெருந்துறை மாவட்ட துணை செயலாளர்கள் சி.அண்ணாமலை, மு.கிருஷ்ணமூர்த்தி, கே.ஜெயக்குமார், ஜெ.கவிதா, ஜெனிபர் ரோஸ்மின் மேரி ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும், மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கே.அமுதா, R.ராஜேஷ்குமார், மகளிர் விடுதலை இயக்க மாவட்ட செயலாளர் ஆ.சுபாஷினி, இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாவட்ட செயலாளர்கள் அ.மணிகண்டன், D.நந்தினி, பெருந்துறை ஒன்றிய செயலாளர் (கிழக்கு) அ.ஜெகதீசன், பெருந்துறை நகர செயலாளர் மு.முருகசாமி, கிழக்கு பெருந்துறை ஒன்றிய பொருளாளர் ரா.ஜீவா, பெருந்துறை ஒன்றிய துணை செயலாளர் சௌந்தர், பெருந்துறை ஒன்றிய பொருளாளர் E.தனலட்சுமி, கிறிஸ்துவ சமூக நீதி பேரவை ஒன்றிய செயலாளர் செ.தீமோத்தேயு, பெருந்துறை ஒன்றிய செயலாளர் (வடக்கு) ச.குமார், சென்னிமலை நகர செயலாளர் விஜயா மற்றும் சென்னிமலை ஒன்றிய செயலாளர் ஜெபராஜ் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் அனைவரும் பொறுப்புடன் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.



