காரியாபட்டி, ஜூலை 21 –
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வைத்திய லிங்க நாடார் மேல்நிலைப் பள்ளியில் கல்வி கண் திறந்த பெருந்தலைவர் காமராஜரின் 123-வது பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாள் விழாவாக கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு பள்ளிச் செயலாளர் பெரியணராஜன் தலைமை வகித்தார். ஆரம்பப் பள்ளிச் செயலாளர் சுந்தர் முன்னிலை வகித்தார். பள்ளித் தலைமையாசிரியர் செல்வராஜ் வரவேற்புரை நிகழ்த்தினார். விழாவில் மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி , பாட்டுப் போட்டி என பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.
இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து கடந்த பொதுத் தேர்வில் 10 மற்றும் 11-ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் நடனம், பாடல், சிலம்பம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.