திருச்சுழி, அக். 06 –
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா மிதலைக்குளம் கண்மாய் கரையில் மண் அரிப்பை தடுத்து இயற்கை வளத்தை பாதுகாக்கும் வகையிலும் பனைமரத் தொழிலை மீட்டெடுப்பதற்கும் பொருட்டு காவை தென் இந்திய கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் முன்னேற்ற நலச்சங்கம் சார்பாக பனை விதைகள் பதிக்கும் பணி நடைபெற்றது.
இந்த பணியை இக்கிராமத்தை சேர்ந்த ரவிக்குமார் ஒத்துழைப்போடு காவை அமைப்புசாரா மாநில பொதுச் செயலாளர் முருகேசன் ஏற்பாட்டில் கண்மாய் கரையில் சுமார் 600 பனைவிதைகள் நடவு செய்யப்பட்டது. இந்த பணியின் போது மாவட்ட செயலாளர் வாசு, நரிக்குடி ஒன்றிய செயலாளர் கணேசன், காரியாபட்டி நகர துணைத்
தலைவர் பாலமுருகன், கணினி இயக்குனர் மாரிச்சாமி, சமூக ஆர்வலர் கருப்புசாமி மற்றும் கிளை உறுப்பினர்கள் மற்றும் கிராமப் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பணி நிறைவின் போது பனை விதைகள் நடுவதை ஆர்வப்படுத்தும் வகையில் பங்கேற்றவர்களுக்கு தொழிற்சங்கத்தில் சார்பில் நற்சான்றுகள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை காவை தென் இந்திய கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் முன்னேற்ற நலச்சங்கம் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.



