திருச்சுழி, அக். 13 –
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள புளியங்குளம் கிராமத்தில் காவை தென் இந்திய கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் முன்னேற்ற நலச்சங்கத்தின் சார்பாக மாநில பொது செயலாளர் முருகேசன் ஏற்பாட்டில் சுமார் 800 பனை விதைகள் கிராம பொதுமக்கள் ஒத்துழைப்புடன் கண்மாய் கரைப்பகுதியில் நடவு செய்யப்பட்டது.
இந்த பணியின் போது நரிக்குடி ஒன்றியச் செயலாளர் கணேசன், பேய்குளம் கிளை
மகளிர் அணித் தலைவி மாரீஸ்வரி, சமூக ஆர்வலர் பெரியசாமி, மகாலெட்சுமி மற்றும் கிளை உறுப்பினர்கள் கார்த்தி, வேல்முருகன், மாரிமுத்து ஆகியோர் உட்பட கிராம பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.



