மார்த்தாண்டம், செப். 22 –
புதுக்கடை அருகே உள்ள ராமன்துறை கடற்கரை கிராமத்தை சேர்ந்தவர் சுஜின் (25). இவர் குழித்துறை ஜேஎம் 2-வது நீதிமன்றத்தில் தாக்கல் மனு தாக்கல் செய்தார். அதில் புதுக்கடை அருகே உள்ள முள்ளுர்துறை பகுதியை சேர்ந்த கேதரின் பிளஸ்சி (23) என்பவருக்கும் தனக்கும் கடந்த 2023 ஆண்டு திருமண நடத்தது. நாங்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். வெள்ளிமலையில் உள்ள ஒரு தேவாலயத்தில் எங்கள் திருமணம் நடந்தது.
திருமணத்திற்கு பின் கேதரின் பிளசி என்னை திட்டமிட்டு ஏமாற்றி, என்னிடமிருந்து ரூபாய் 12 லட்சம் மற்றும் நகைகளை வாங்கினார். திருமண வாழ்க்கையில் நான் ஏமாற்றப்பட்டு உள்ளேன். நம்பிக்கை மோசடியில் அவர் ஈடுபட்டுள்ளார். என புகாரில் கூறி இருந்தார்.
இந்த புகார் மனுவின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரண நடத்த குழித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பேரில் தற்போது புதுக்கடை போலீசார் மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கேதரின் பிளசி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


