கோவை, மார்ச் 28 –
கோவையில் பிரபல ஜோதிடர் பாரதிய ஜனதா கட்சியின் ஆன்மீகப் பிரிவு மாநிலத் தலைவர் ஷெல்வி “விரல் நுனியே அஸ்திரம்” என்ற பாடலை வெளியீடு செய்தார்.
இது குறித்து அவர் கூறுகையில்: ஆன்மீகப் பிரிவின் சார்பாக, அனைவரும் ஓட்டு போட வேண்டும் என்பதை வலியுறுத்தவே இந்தப் பாடலை வெளியீடு செய்தோம். மேலும் ஆன்மீக பிரிவு சார்பில் தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் சதிஷ் குமார், ஜோதிராமர் ஆகியோரிடத்தில் அடங்கிய பெஞ்ச் முன்பு பழனி கோயிலில் 165 கோடி டென்டர் முறை கேடு வழக்கு நடைபெற்று வருகிறது.
இது குறித்து ஆராய்ந்து அறிக்கை தர குழு ஒன்றை நீதிமன்றம் அமைத்துள்ளது. இது வரவேற்கத்தக்கது. தமிழகத்தில் பல்வேறு கோவில்களில் நடைபெற்று வரும் ஊழல்கள் குறித்த விசாரிக்க வலியுறுத்துவோம். பாஜக ஆன்மீக பிரிவு இனிமேல், ஹிந்து அறநிலையத்துறைக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும். சுமார் 4000 கோயில்களில் நடைபெற்ற கும்பாபிஷேகம் அனைத்தும் பக்தர்கள் கொடுத்த நிதியில் தான் நடைபெற்றது என்றார்.



