மார்த்தாண்டம், மே 15 –
பளுகல் அருகே உள்ள இடைக்கோடு பகுதியை சேர்ந்தவர் சத்திய தாஸ் (53). இவர் மேல்பாலை பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணியாற்றி வந்தார். சம்பவ தினம் வீட்டில் இருந்தபோது திடீரென சத்திய தாஸ் மயங்கி விழுந்துள்ளார். இதில் அவரது பின் தலையில் அடிபட்டு படுகாயம் ஏற்பட்டது. அவரை உடனடியாக ஆட்டோ மூலம் மேல் பாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக காரக்கோணம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சத்யதாஸ் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். இதையடுத்தது அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து பளுகல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


