By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாற்கரச்சாலை வடிகாலை திக்கணங்கோடு சேனலில் இணைத்த விவகாரம்; ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் நேரடி ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாற்கரச்சாலை வடிகாலை திக்கணங்கோடு சேனலில் இணைத்த விவகாரம்; ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் நேரடி ஆய்வு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாற்கரச்சாலை வடிகாலை திக்கணங்கோடு சேனலில் இணைத்த விவகாரம்; ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் நேரடி ஆய்வு

Last updated: November 1, 2025 8:21 pm
November 1, 2025
43 Views
Share
SHARE

தக்கலை, நவ. 1 –

குமரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை துறை அமைத்து வரும் 4 வழிச்சாலைக்காக பல்வேறு நீர்நிலைகள் அழிக்கப்பட்டு வருவதுடன் தரமற்ற முறையில் பல்வேறு குளறுபடிகளுடன் சாலைப் பணிகள் நடைபெற்று வருவது சம்பந்தமாக ஏற்கனவே புகார் உள்ளது. இதைத் தொடர்ந்து நீர் நிலைகளை அழிக்காமல் தரமான முறையில் சாலை அமைக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம், சம்பந்தப்பட்ட துறை உட்பட்ட அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் வாக்களித்திருந்தனர்.

இந்நிலையில், மீண்டும் தற்போது நீர்வளத்துறை தக்கலை அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள திக்கணங்கோடு சேனலில் நான்கு வழிச்சாலை தொட்டி பாலத்தையொட்டி நாற்கர சாலையோர இனைப்பு சாலையின் வடிகால் தண்ணீர் நேரடியாக திக்கணங்கோடு சேனலுக்குள் பாயும் விதத்தில் வடிகால் கட்டப்பட்டுள்ளது. இதனை நீர்வளத்துறை உட்பட மாநில அரசு அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை.

இதனால் மழைக்காலங்களில் பெருவெள்ளம் நேரடியாக சேனலுக்குள் பாய்ந்து, சேனல் உடையும் என்பதோடு தொட்டி பாலத்தை ஒட்டிய பகுதிகளில் அதிகளவு தண்ணீர் தேங்கி நாற்கரச்சாலைக்குள் கசிவதோடு உயரமான அப்பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு தொட்டி பாலமே சாயவும் . உயிர் இழப்புகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதை உறுதிப்படுத்தும் விதத்தில் தற்போது சிலதினங்கள் பெய்த மழையில் அப்பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு நாற்கர சாலைக்குள் விழுந்து கிடக்கிறது.

இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சித் தலைவர் நடத்திய விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு பாசனத்துறை சேர்மன் வழக்கறிஞர் வின்ஸ் ஆன்றோ எடுத்துச் சென்றார். இதையடுத்து தவறு செய்த தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டும், உரிய ஆய்வு செய்தும் நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அழகுமீனா உத்தரவிட்டார்கள்.
இதைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவுபடி – ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) ஜெங்கின் பிரபாகர் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் தக்கலை நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் கதிரவன் உள்ளிட்ட அதிகாரிகள் தனித்தனியாக அப்பகுதியில் நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

குமரி மாவட்ட ஆட்சியரின் அதிரடி நடவடிக்கை காரணமாக தொடர்ச்சியாக பல்வேறு துறை அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு செய்து வருவதால் குமரி மாவட்டத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இனிமேலாவது தரமான முறையில் குளறுபடிகளின்றி பணிகள் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பில் குமரி மாவட்ட மக்களும் , நீர்நிலைகள் காப்பாற்றப்படும் என்ற நம்பிக்கையில் விவசாயிகளும் உள்ளனர்

விளம்பரம்

You Might Also Like

குமரியில் குடிநீர் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
நிபா வைரஸ் எதிரொலி தமிழக கேரள எல்லை
கடல் சீற்றம் காரணமாக சுற்றுலாப் பயணிகள் கடற்கரைக்கு செல்ல தொடரும் தடை நீடிப்பு
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் ஆஞ்சநேயருக்கு மூல நட்சத்திரத்தை முன்னிட்டு முழு உருவ வெள்ளிஅங்கி சாத்தப்பட்டது
களிமண் மற்றும் வண்டல் மண் இலவசமாக எடுத்துக் கொள்ள அரசாணை வெளியீடு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

பேரூராட்சியில் 1கோடியே 46 இலட்சத்தில்

November 5, 2024
78 Views
வெள்ளாளர் முன்னேற்ற கழகம் பொறியாளர் மணிகண்டன் இல்ல திருமண விழா
சொத்துக்காக தம்பியை கத்தியால் குத்திய அண்ணன் கைது
இளைஞர்கள் சார்பில்10-ம் ஆண்டு பொங்கல் விழா
குருக்கள்பட்டியில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா உறுதிமொழி ஏற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account