நாகர்கோவில், ஏப். 21 –
நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளர் எம் ஆர் காந்தி எம்எல்ஏ இன்று காலை 7:00 மணி முதல் பிரச்சாரத்தை தொடங்கினார். காலையில் எஸ்எல்பி பள்ளி மைதானத்தில் நடைபயிற்சியில் இருந்தவர்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பின்னர் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள ஈசன்தங்கு, கள்ளக்குறிச்சி, ராஜாக்கமங்கலம், அம்மச்சியார் கோவில், விளாத்தி விளை, பூவன் குடியிருப்பு, சுண்டபற்றி விளை, தோப்புகுடியிருப்பு, எறும்புக்காடு, ராமன்புதூர், பீச் ரோடு பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.
வீடு வீடாக சென்றும் திறந்த ஜீப்பில் சென்றும் வாக்குகள் சேகரிப்பில் அவர் தீவிரமாக ஈடுபட்டார்.
அப்போது அவர் பிரச்சாரத்தில் பேசியதாவது: பிரதமர் மோடி இந்தியாவை வலிமையான நாடாக மாற்றி உள்ளார். தமிழ்நாட்டுக்கு வலுவான கட்டமைப்பு ஏற்படுத்த எங்கள் கூட்டணிக்கு நீங்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும். மீண்டும் தாமரை சின்னத்துக்கு வாக்குகளை தாருங்கள். பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் திட்டம், பிரதமரின் வீடு கட்டும் திட்டம், கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் சிறப்பாக வந்து சேர அதிமுக பாரதிய ஜனதா கட்சி கூட்டணிக்கு வாக்குகளை தாருங்கள் என பேசினார்.
பின்னர் அவர் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில்: நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதியில் கடந்த முறையை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். நிச்சயமாக நாகர்கோவில் தொகுதியில் மீண்டும் தாமரை வெற்றி பெற்று இந்த வெற்றியை பிரதமரிடம் சமர்ப்பிப்போம். நாகர்கோவில் தொகுதி வெற்றியை பிரதமர் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் என்றார். தொடர்ந்து மாலையில் நாகராஜா கோவில் மைதானத்தில் தனது பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.



