திருச்சி, ஜூன் 2 –
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே அரசலூர் கிராமத்தில் மகா மாரியம்மன் கோவில் திருவிழாவின் போது, தீச்சட்டி பற்ற வைத்த நெருப்பு அருகில் இருந்த கதண்டுக் கூட்டில் பட்டதால், கதண்டுகள் பறந்து வந்து கடித்ததில் 60-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயமடைந்தனர். அவர்கள் தொட்டியம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் சோகமான சூழ்நிலை நிலவியது.



