தஞ்சாவூர், ஜூலை 10 –
ஏழ்மையில் இருக்கிறோம் என தேர்தலுக்கு முன்பு தாய், மகள் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து தொழிலாளி குடும்பத்திற்கு வீடு வழங்க த.வெ.க அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து அமைச்சர் ராஜ்குமார் அதற்கான ஆணையை நேரில் வழங்கினார்
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள உமையாள் புரத்தைச் சேர்ந்தவர் சசிகுமார். இவர் மரம் ஏறும் தொழில் செய்து வந்தார் இவருடைய மனைவி பவுசியா இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு நிரந்தர வீடு இல்லாததால் ஓலை குடிசையில் தார்ப்பாய் போட்டு தங்கி வசித்து வருகின்றனர்.
சட்டசபை தேர்தலுக்கு முன்பாக சசிகுமார் மனைவி பவுசியாவும், மகள் சரணக்கியாவும் த.வெ.க தலைவர் விஜய்க்கு ஒரு கோரிக் கை வைத்து வீடியோ வெளியிட்டு இருந்தனர். அதில் விஜய் அண்ணா உங்க ளைத்தான் நம்பி இருக்கிறோம். அப்பா தென்னை மரம் ஏறும் போது கீழே விழுந்து விட்டார். இதனால் வீட்டில் கஷ்டமாக இருக்கிறது சாப்பாட்டிற்கு கஷ்டப்படுகிறோம். நீங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் எங்களுக்கு வீடு கட்டி தர வேண்டும் என கண்ணீர் மல்க சாணக்கியா பேசியிருந்தார்.
அதேபோல் பவுசியா பேசும்போது எங்கள் வீட்டில் உள்ள 4 வாக்கு களும் உங்களுக்குத்தான் நீங்கள் விஜய் தான் ஆட்சிக்கு வர வேண்டும். எல்லாம் மாற வேண்டும் எனது கணவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று மருத்துவம் பார்த்து வருகிறோம். எங்களுக்கு நீங்கள் வீடு கட்டித் தருவதுடன் எங்களது குழந்தைகள் படிப்புக்கு வழிவகை செய்ய வேண்டும். நீங்கள் தான் கண்டிப், பாக ஆட்சிக்கு வருவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது என கூறி இருந்தார்.
மேலும் தங்களது குடிசை வீட்டில் த.வெ.க கொடியை ஏற்றி வைப்பது போன்று வீடியோவையும் வைலாகி வந்தது. இந்த வீடியோவை பார்த்த முதலமைச்சர் விஜய் சாணக்கியர பவுசியாவின் கோரிக்கையை ஏற்று அவர்கள் தஞ்சாவூரில் குடியிருக்க வீடு வழங்க உத்தரவு பிறப்பித்தார்.
அதன்படி தஞ்சாவூருக்கு வந்த வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ராஜ்குமார் புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு நிர்வாக அலுவலருக்கு பவுசியாவின் குடும்பத்தினரை வரவழைத்தார்.
பின்னர் அவர்களுக்கு தஞ்சாவூர் அடுத்த பிள்ளையார்பட்டியில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் திருச்சி கோட்டம் சார்பில் பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் ரூபாய் 19.48 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 286 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப் பில் வீடு ஒன்றை ஒதுக்கீடு செய்துதான அதற்கான ஆணையை கலெக்டர் ரேவதி, விஜய் சரவணன் எம்எல்ஏ ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்.
பின்னர் அமைச்சர்கள் ராஜ்குமார் செய்தியாளர்களிடம் கூறும் போது தமிழகம் முழுவதும் புதிய பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளை ஆய்வு செய்து வருகிறேன் .மிகவும் பழுதடைந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்டு புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்
புதிதாக கட்டப்பட்டுள்ள அடுக்கு மாடி குடியிருப்புகள் முதலமைச்சரின் கரங்களால் திறக்கப்பட்டு வீடு இல்லாத மக்களுக்கு வீடு வழங்கி குடியமர்த்துவோம் என்றார்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு நகர்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரியத்தின் நிர்வாக பொறியாளர் யோகேஸ்வரன், உதவி நிர்வாக பொறியாளர் ரியோ ஜோன், இளநிலை பொறியாளர் அரிகோவிந்தன், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நிர்வாக பொறியாளர் பார்த்திபன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



