சுசீந்திரம், பிப். 17 –
தெங்கம்புதூர் அருகே கீழபுத்தளம் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (37), கொத்தனார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தந்தை – தாயார் இறந்து விட்டதையடுத்து பாலகிருஷ்ணன் அவரது சகோதரி சுமதி வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வந்தார். திருமணம் ஆகாத மனவிரக்தில் இருந்த பாலகிருஷ்ணன் குடிப்பழக்கத்திற்கு ஆளானார்.
சம்பவத்தன்று சுமதி வீட்டில் இருந்து வெளியே மீன் கடைக்கு சென்றிருந்தார். அப்போது அவர் வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது பாலகிருஷ்ணன் ஓட்டு வீட்டில் படுக்கையறையில் பணம் கம்பில் கயிற்றால் தூக்கில் பிணமாக தொங்கினார். இது குறித்து சுசீந்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தூக்கில் பிணமாக தொங்கிய பாலகிருஷ்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சுமதி கொடுத்த புகாரின் பேரில் சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


