தூத்துக்குடி, ஜூன் 3 –
தூத்துக்குடியில் திமுக முன்னாள் தலைவரும், மறைந்த முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை முன்னாள் அமைச்சர், திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் பி.கீதா ஜீவன் வழங்கினார்.
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகில் மாநகர திமுக சார்பில் நடைபெற்ற விழாவிற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் தலைமை தாங்கினார். அங்குப் பொதுமக்களுக்குக் கேக் வெட்டி இனிப்புகள் வழங்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, எட்டையாபுரம் சாலையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தின் முன்பாக அமைந்துள்ள கலைஞரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர், கழக கொடியை ஏற்றி வைத்த முன்னாள் அமைச்சர் கீதாஜீவன்,
இவ்விழாவில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், திராவிடர் கழக மாவட்ட தலைவர் முனியசாமி உட்பட கட்சி நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள், வட்ட செயலாளர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்



