திருவெண்ணெய்நல்லூர், செப். 13 –
திருவெண்ணெய்நல்லூர் அருகே பெரியசெவலையில் புரட்சி பாரதம் கட்சியின் கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சந்தோஷ் – ப்ரீத்தி திருமண வரவேற்பு விழா செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை திருமண மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவில் புரட்சி பாரதம் கட்சி மாநில முதன்மை செயலாளர் ருசேந்திரகுமார் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
மேலும் விழாவில் மிசா.பரணிமாரி, அன்பரசு, வலசை.தர்மன், ஜான்சன், ஆம்ஸ்ட்ராங், எட்மன், பூவை.முனுசாமி, கோபிநாத் மற்றும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ, குமரகுரு, மாணவரணி பாக்யராஜ், திமுக மருத்துவரணி டாக்டர். சீனு.காவியவேந்தன் அன்பு (எ) பழனி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில் புரட்சி பாரதம் கட்சி நிர்வாகிகள் தீபன், வேல்முருகன், திருநாவுக்கரசு, தியாகராஜன், கோபிநாதன், ஏழுமலை, செல்வகுமார், ராஜபாண்டியன், ரஞ்சித், விஜயபாஸ்கர், பிரபு, அர்ஜுனன், ரவி, தர்மா, மாநில செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் பூவை.ஆறுமுகம், பெத்தீஸ்வரன், தீர்த்தமலை, லோகு, மனக்குப்பம் மணிகண்டன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.



