திருவெண்ணெய்நல்லூர், அக். 04 –
திருவெண்ணெய்நல்லூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரில் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிறுமதுரை, சின்னசெவலை, டி.எடையார், மழவராயனூர் ஆகிய ஊராட்சிகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முகாமிற்கு பி.டி.ஒ., முல்லை தலைமை தாங்கினார்.
திருக்கோவிலூர் நகர் மன்ற தலைவர் முருகன், ஒன்றிய சேர்மன் ஓம்சிவசக்திவேல், மாவட்ட கவுன்சிலர் பி.வி.ஆர்.விசுவநாதன், தாசில்தார் செந்தில்குமார், தலைவர்கள் சுந்தரமூர்த்தி, மேகலா சதீஷ், துணைத் தலைவர் பாலாஜி, மகாலிங்கம், கவுன்சிலர் ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். பி.டி.ஓ., பாலசுப்பிரமணியன் அனைவரையும் வரவேற்றார். முகாமில் முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்.எல்.ஏ., கலந்துகொண்டு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, பட்டா பெயர் மாற்றம், மின் இணைப்பு பெயர் மாற்றம், ரேஷன் கார்டு உள்ளிட்ட 15 துறைகள் சார்ந்த பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.
மேலும் முகாமில் பயனாளிகளுக்கு புதிய ரேஷன் கார்டு, கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், தோட்டக்கலை துறை சார்பில் பாரம்பரிய விதைகள் வழங்கப்பட்டது. இதில் பக்தவச்சலம், நிர்மல்ராஜ், வெங்கடேசன், விஸ்வநாதன், கிருஷ்ணராஜ், குமரவேல், சண்முகம், தல.சித்தா, துறை சார்ந்த அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.



