திருச்சி, ஜூன் 9 –
திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு நேற்று வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், சில மணித்துளிகளில் அது வெடிக்கப் போவதாகவும் மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது. இதை அடுத்து, நீதிமன்ற ஊழியர்களின் புகாரின் பேரில், போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் சம்பவ இடத்தில் சோதனை மேற்கொண்டனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும் இதேபோல் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், தற்போது நீதிமன்ற வளாகத்திற்கு விடுக்கப்பட்டுள்ள இந்த மிரட்டல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



