திருப்பூர், செப்டம்பர் 22 –
திராவிட முன்னேற்றக் கழக திருப்பூர் மத்திய மாவட்டம் ஆண்டிபாளையம் பகுதி கழகத்திற்கு உட்பட்ட 41 (அ) வட்டக் கழக அலுவலக திறப்பு விழா மத்திய மாவட்ட கழக செயலாளர் க செல்வராஜ் எம்எல்ஏ தலைமையிலும் டிகேடி மாநகரச் செயலாளர் டி கே டி.மு நாகராஜ் முன்னிலையிலும் வார்டு செயலாளர் மு. பாண்டி, மாநகர மகளிர் அணி அமைப்பாளர் திருமதி விஜயா ஏற்பாட்டிலும் நடைபெற்றது இந்த விழாவில் அலுவலக திறப்பு விழா மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பகுதி செயலாளர் மியாமி ஐயப்பன், ஒன்றிய கழகச் செயலாளர் சோமசுந்தரம், கிருஷ்ணமூர்த்தி, சீனிவாசன், மாநில மகளிர் ஆலோசனைக் குழு தலைவர் மலர் மரகதம், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கலைச்செல்வி, மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் ஆனந்தி மற்றும் வட்டக் கழக செயலாளர் விவேகானந்தன், எஸ் ஆர் ரமேஷ், தே.ந. சீனிவாசன், ஆதிதிராவிட நலக்குழு மத்திய மாவட்ட துணை அமைப்பாளர் டாப்சா ஆறுமுகம் மற்றும் நிர்வாகிகள் சரவணன் சந்தோஷ், முருகேஷ், குமார், ராமமூர்த்தி, கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் நூற்றுக்கு மேற்பட்டோர் பெருந்திரளாக பங்கேற்றனர்.



