திண்டுக்கல், ஜூன் 23 –
திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் சார்பாக 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற திண்டுக்கல் A.வெள்ளோடு நரசிங்கபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு
பாராட்டு விழா நிகழ்ச்சி திண்டுக்கல் A.வெள்ளோடு நரசிங்கபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் தலைவர் Rtn.H.புருஷோத்தமன் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக TNEB (ஓய்வு) தலைமை பொறியாளர் Rtn.V.மதனமோகன், திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் தலைவர் Rtn.B.செந்தில்குமார் 2025-2026 ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி நரசிங்கபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற ம.சாய் தேவி ஸ்ரீ 469, இரண்டாம் மதிப்பெண் பெற்ற சு. காளீஸ்வரி 468, மூன்றாம் மதிப்பெண் பெற்ற அ.அந்தோணி ஆஷா 453, 12-ம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற த.அபிஷேக் 468, இரண்டாம் மதிப்பெண் பெற்ற
வெ.நந்தினி 467, மூன்றாம் மதிப்பெண் பெற்ற ரா.ஹரிதா 463 ஆகியோர்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு மற்றும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவியர்களை சிறப்பான முறையில் பயிற்றுவித்த ஆசிரியர், ஆசிரியைகளை கெளரவப்படுத்தும் விதமாக பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் A.வெள்ளோடு நரசிங்கபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகள், மேற்கு
ரோட்டரி சங்கத்தின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள். இந்நிகழ்வில் திண்டுக்கல் A.வெள்ளோடு நரசிங்கபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் P.அய்யாமலை, ஊர் பெரியவர்கள் V. நாகராஜன், S. மயில்சாமி, நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள். இந்நிகழ்ச்சியின் முடிவில் திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் செயலாளர் Rtn.P.சந்திரசேகரன் நன்றி கூறினார்.