தருமபுரி, மார்ச் 09 –
தருமபுரியில் இந்திய மாதர் சங்கம் சார்பில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மாபெரும் பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இருந்து கருத்தரங்கம் நடைபெறும் மின்னலகம் அரங்கம் வரை சென்று முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து கருத்தரங்கத்தை மாவட்ட பொறுப்பாளர் இந்தியா மாதர் சங்கம் அலமேலு தலைமையேற்று நடத்தினார்.
தொழிலாளர் சங்கம் காளியம்மாள், சேலம் மாவட்ட அமைப்பாளர் சத்தியபாமா, மாவட்ட பொறுப்பாளர்கள் பிரதாபன், பஞ்ச கவுண்டர், மாதையன், இந்திய விவசாயிகள் சங்கம் ராஜகோபால், இந்திய பழங்குடி மக்கள் சங்கம் ராஜி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.



