தருமபுரி, மே 15 –
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் எல்நினோ விளைவுகளை எதிர்கொள்வது குறித்து வல்லுநர்கள், தன்னார்வலர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கான பயிற்சி பட்டறை மாவட்ட ஆட்சியர் சதீஷ் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ரூபன் சங்கர் ராஜ், மகளிர் திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் லோகநாதன், சிறுதுளி இயக்க தலைவர் மயில்சாமி, ஊரக வளர்ச்சி முகாமை செயற்பொறியாளர் பாலகிருஷ்ணன், பென்னாகரம் உட்கோட்டம் உதவி செயற்பொறியாளர் மகேஷ் குமார், தருமபுரி உட்கோட்டம் உதவி செயற்பொறியாளர் சாயி ஜனார்த்தனன் உள்ளிட்ட தொடர்புடைய அரசு அலுவலர்கள், வல்லுநர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.



