நாகர்கோவில், செப். 8-
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சமூக ஊடகத்துறைக்கான புதிய மாநில தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களை நியமிக்க காங்கிரஸ் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இதுதொடர்பான அறிவிப்பை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்டுள்ளார்.
அதன்படி, தமிழ்நாடு காங்கிரஸ் சமூக ஊடகத்துறையின் மாநில தலைவராக கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் இணைந்து பணியாற்றும் வகையில் சக்தி மாரிதாசன், ஜி.கே. முரளிதரன், சிவசக்தி ராஜா, குணசேகரன், சஞ்சய் காந்தி, ஜான் சாமுவேல், அப்துல் ரகுமான் ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த புதிய நிர்வாகிகளின் நியமனம் உடனடியாக அமலுக்கு வருவதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



