கோவை, ஜூன் 19 –
தமிழக வெற்றி கழகத் தலைவர், தமிழக முதல்வர் C.ஜோசப் விஜய் ஆணைக்கிணங்க, கழகப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சி & நீர்வளத்துறை அமைச்சருமான என்.ஆனந்த் அறிவுறுத்தலின்படி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரும், கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான வி.சம்பத்குமார் வாழ்த்துக்களுடன், தமிழக வெற்றி கழகத்தின் கருமத்தம்பட்டி நகரக் கழக அலுவலகத்தை சூலூர் சட்டமன்ற உறுப்பினர் என்.எம் சுகுமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
மேலும், கருமத்தம்பட்டி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சுப மற்றும் துக்க நிகழ்வுகளுக்கான இலவச சேர், டேபிள் வழங்கும் சேவையும், உறுப்பினர் சேர்க்கை முகாமும் தொடங்கி வைக்கப்பட்டது. பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகள் மற்றும் கோரிக்கைகளை தெரிவிக்கும் வகையில் குறைதீர்க்கும் பெட்டியும் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இவ்விழாவில் கலந்து கொண்ட சிறப்பித்த அனைவருக்கும் நகரச் செயலாளர் ஜில்லா பாலு நன்றி தெரிவித்தார். நிர்வாகிகள் ராஜேந்திரன், அமர்சிங், கனகராஜ், இளவரசன், சிவா, ஜீவானந்தம், சிலம்பரசன், கார்த்திகேயன், குமார், சுந்தர், கில்லி, கணேஷ் பாபு, சதீஷ், சஞ்சீவ், சரவணன், அஜித், முத்து, சபரி, ஜேம்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.



