தஞ்சாவூர், ஜூன் 22 –
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் விவசாயிகளுக்கு 23வது தவணை நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் வினோத் ரவி கலந்து கொண்டார். கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பிரதமரின் நீதி உதவி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 23 வது தவணை தொகையை மற்றும் குறுவை தொகுப்பு திட்டத்தில் இடுபொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ரேவதி தலைமை தாங்கினார். அப்போது விவசாயிகளுக்கு 23வது தவணை வழங்கும் பணியை பிரதமர் மோடி மேற்கு வங்கத்தில் தொடங்கி வைத்தது காணொளி காட்சி வழியாக ஒளிபரப்பப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் வினோத் ரவி விவசாயிகளுக்கு மண்வள அட்டை, குறுவை தொகுப்பு திட்டத்தில் உயிர் உரம், நெல் நுண்ணூட்டம், பருத்தி நுண்ணோட்டம் போன்றவற்றை வழங்கினார். இதையடுத்து வேளாண்மை துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரசின் திட்டங்கள் குறித்து கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், வேளாண்மை இயக்குனர் வித்யா, வருவாய் கோட்டாட்சியர் திருமலை வேளாண்மை துணை இயக்குனர்கள் ஆய்யம் பெருமாள் (பயிற்சி நிலையம்), சாருமதி (மாநிலத் திட்டம்), மாலதி (மத்திய திட்டம்), மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சாமுவேல், தோட்டக்கலை துணை இயக்குனர் வெங்கட்ராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தமிழக முதலமைச்சர் விஜய் பிறந்தநாளில் யொட்டி கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது இதில் அமைச்சர் வினோத் ரவி துறை கலந்து கொண்டு முதலமைச்சர் விஜய் பெயரில் அர்ச்சனை செய்து வழிபட்டார். தொடர்ந்து கும்பகோணத்திலிருந்து சோழபுரம் திருப்பனந்தாள், அணைக்கரை வரை பஸ் நடை நீட்டிப்புசேவையை அமைச்சர வினோத் ரவி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
முன்னதாக அமைச்சர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்: அப்போது அவர் முதலமைச்சர் விஜய் பிறந்தநாளையொட்டி கும்பகோணம் தொகுதி மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவி வழங்கப்பட உள்ளன. கும்பகோணம் பகுதியில் உள்ள சேமிப்பு கிடங்குகளில் நெல் முட்டைகள் நனைந்து விலகி உள்ளதா? என ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். திருமண்டங்குடியில் கரும்பு விவசாயிகள் தொடர் போராட்டம் தொடர்பான ஆலோசனை செய்த பின் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
நிகழ்ச்சியில் அரசு போக்குவரத்து கழக மண்டல மேலாளர் நடராஜன், தாசில்தார் பூங்கொடி, மாநகராட்சி ஆணைய சுதா, போக்குவரத்து கழக துணை மேலாளர்கள் தமிழ்ச்செல்வன், ராஜேஷ், உதவி மேலாளர்கள் கண்டாய்தபாணி, ராஜ்மோகன், கிளை மேலாளர் சுரேஷ், உதவி பொறியாளர்கள் ராஜா, திருஞான சம்பந்தம், த.வெ.க கிழக்கு மாவட்ட பொருளாளர் விஜய் சந்திரன், நிர்வாகிகள் செந்தில் அஞ்சனா பாலாஜி, வினித், பெஞ்சமின், மாநகர செயலர் முருகானந்தம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



