தஞ்சாவூர், ஜூன் 13 –
தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளுக்கு ஜூன் 19ஆம் தேதி முதல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.
இது குறித்து மாவட்ட கலெக்டர் ரேவதி தெரிவித்திருப்பதாவது: மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் நடத்தப்படும், ஒருங்கிணைந்த பட்டதாரிகள் நிலையில் (எஸ் எஸ் சி , சி ஜி எல்)உள்ள 12,256 பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூன் 22 ஆம் தேதி இதற்கான இணையதள முகவரி https://ssc.gov.in இதே போல் ரயில்வே தேர்வாணையத்தின் சார்பில் காலியாக உள்ள 11,120 லோகோ உதவி ஓட்டுநர் பணி யிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி ஜூன் 16ஆம் தேதி இதற்கான இணைய தள முகவரி https://rrbchennai.gov.in இத்தேர்வுகளுக்கு தயாராகி வரும் போட்டி தேர்வர்கள் பயன் பெறும் வகையில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்பு திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10:30 மணி முதல் பிற்பகல் 01.30 மணி வரை நடைபெற உள்ளது.
இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப் படங்கள், ஆதார் அட்டை நகலுடன் தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நேரில் அணுகலாம். மேலும் விவரங்களுக்கு 04362-237037என்ற தொலைபேசி எண்ணி ல் தொடர்பு கொள்ளலாம்.



